ஏற்றுமதி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை இழக்கும் ஏற்றுமதியாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏற்றுமதி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை இழக்கும் ஏற்றுமதியாளர்கள்!


தங்களது உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களைப் இறக்குமதி செய்வதில் நிலவும் பிரச்சினை காரணமாக, ஏற்றுமதியாளர்கள் சந்தை வாய்ப்பை இழக்கும் அபாய நிலை உள்ளதாக இலங்கை கப்பல் பிரதிநிதிகள் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் வெளிநாட்டு ஒதுக்கம் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, துறைமுகத்தில் கப்பல்களுக்கு தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மூலப்பொருட்களை உரிய நேரத்திற்கு பெற்றுக்கொள்ள முடியாமையால், கொள்வனவாளர்களுக்கு தங்களது உற்பத்திகளை உரிய காலத்தில் ஒப்படைக்கும் செயன்முறையில் ஏற்றுமதியாளர்கள் சவாலை எதிர்கொள்கின்றனர்.

இதன் காரணமாக, கொள்வனவாளர்கள் வேறு சந்தை வாய்ப்பை நாடும் அபாய நிலை உள்ளதாக இலங்கை கப்பல் பிரதிநிதிகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.