எதிர்வரும் மூன்று வருடங்களை எதிர்கொள்வது எவ்வாறு? ஜனாதிபதி விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் மூன்று வருடங்களை எதிர்கொள்வது எவ்வாறு? ஜனாதிபதி விளக்கம்!


ஜனாதிபதி தேர்தலில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், தவறான விமர்சனங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீள சரிசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டில் உள்ள விவசாயிகளை தான் எப்போதும் மறவேன் என உறுதியளித்த ஜனாதிபதி, பயிர்ச்செய்கை முறையில் விரைவில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.