ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 1000வது நாளைக் குறிக்கும் பிரார்த்தனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 1000வது நாளைக் குறிக்கும் பிரார்த்தனை!


இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்களும், குருமார்களும், பொது மக்களும் ஜனவரி 14ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 1000வது நாளைக் குறிக்கும் பிரார்த்தனையில் ஒன்று கூடுங்கள் என்று கொழும்பு பேராயர்  தனது  முகநூல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


மேலும், 2019 ஆம் ஆண்டு   ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் கடவுளுக்கு முன்பாக அனைத்து கத்தோலிக்க ஆயர்களும், குருமார்களும், அருட்சகோதரிகளும் மற்றும் பாமர மக்களும் தெவத்தே பேராலயத்தில் பிரார்த்தனை ஆராதனைக்காக ஒன்று  நாங்கள் ஒன்று கூடுவோம் என்று பேராயர் விக்கிரமசிங்க கூறினார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால்  பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படைத்தன்மையையும் நீதியையும் எதிர்பார்க்கின்றார்கள் என்று அவர் மேலும் கூறினார்.


இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், அத்துடன்  இத் தாக்குதல்களுக்கு அரசியல் அனுசரணை உள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.