VIDEO: பிலியந்தல விபத்து - ஒருவர் பலி : சாரதி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: பிலியந்தல விபத்து - ஒருவர் பலி : சாரதி கைது!

பிலியந்தலை, ஹொரணை - கொழும்பு வீதியில் பொகுந்தர சந்திக்கு அருகில் இன்று (29) காலை சொகுசு ஜீப் வண்டியில் மோதியதில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜீப் வண்டியை ஓட்டிச் சென்ற பெண் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் வீதியை விட்டு விலகி தொலைபேசிக் கம்பம் மற்றும் சுவர் மீது மோதியதாகவும், அதன் போது அதன் பாதையில் சென்ற பாதசாரிகள் மீது மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பெண் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.