நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்றாளர்கள் புள்ளிவிபரத்தில் சிக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்றாளர்கள் புள்ளிவிபரத்தில் சிக்கல்!


நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களின் துல்லியத்தன்மையில் சிக்கல் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கடந்த வார இறுதியில் மக்களின் நடத்தை மிகவும் வருத்தமளிப்பதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.


எவ்வாறிருப்பினும், நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை, 500 முதல் 600 என்ற அளவில் வைத்துக்கொண்டு, சுகாதார அதிகாரிகள் வெளியிடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.


நாளாந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையும், அண்மைய நாட்களில் ஐயாயிரம் அளவில் இருந்தது. எனவே, வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானதல்ல என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.


அத்துடன், இதுபோன்ற புள்ளிவிபரங்கள் மூலம், நாட்டில் கொவிட் பரவல் அபாயம் இல்லை என்ற எண்ணப்பாடு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுகிறது.


இதன் காரணமாக, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களையும், தனிமைப்படுத்தல் விதிகளையும் மீறி செயற்படுகின்றனர்.


எனவே, எதிர்காலத்தில் கொரோனா பரவலின் தீவிரத் தன்மையும்,  மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஏற்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.