பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்! -சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்! -சரத் வீரசேகர


'பிரியந்த குமாரவின் கொலை சாதாரணமானது.. முஸ்லிம் இளைஞர்கள் கோபப்படும் போது இப்படி நடப்பது இயல்பு.. கவலைப்பட வேண்டாம்..' என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


இவ்வாறு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம் என்றும், முஸ்லிம் இளைஞர்கள் ஆவேசமாக இதுபோன்ற செயல்களை செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக தகவல் இருப்பதாகவும், அதை கணக்கில் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.


இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக அறிக்கையை வாபஸ் பெற்று இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


மறைந்த பிரியந்த குமாரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டுக்குச் சென்றிருந்த போதே அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.