நாட்டில் டொலர் பற்றாக்குறை - நிலைமை குறித்து கறுத்து தெரிவித்த முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் டொலர் பற்றாக்குறை - நிலைமை குறித்து கறுத்து தெரிவித்த முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர்!

இலங்கையிடம் தற்போது கையிருப்பில் இருக்கும் 1100 மில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே உபயோகிக்க முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன குறிப்பிடுகின்றார்.

அடுத்த வருடத்திற்கான இறக்குமதித் தேவைகளுடன் ஒப்பிடுகையில், இரண்டரை வாரங்கள் மட்டுமே கையிருப்பில் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கான இலங்கையின் இறக்குமதித் தேவை சுமார் 23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது வரலாற்றில் மிக மோசமான வெளிநாட்டு சொத்துக்களின் வீழ்ச்சி என்றும், நாட்டின் நிலைமையை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து அடுத்து என்ன செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாதத்துக்குள் பாரியளவில் அந்நியச் செலாவணியைப் பெறாவிட்டால் நாடு மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது மிகவும் தாமதமானது என்று அவர் கூறினார், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டிலிருந்து அரசாங்கம் சுமார் 500 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியைப் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.