அதிகரிக்கும் அரிசி விலை - விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கும் அரிசி விலை - விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை!

எதிர்வரும் ஆண்டில் ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் நாட்டில் உணவுப் பொருட்களுக்கான விலைகள் அதிகளவில் உயர்வடையும் எனவும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நிலைமைக்கு தீர்வு வழங்கப்பாடவிட்டால் ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

பால்மா, எரிவாயு மற்றும் மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவும் எனவும், அவற்றின் விலைகள் தொடர்ந்தும் உயர்வடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கான ஒரே வழி உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதேயாகும் என நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.