இருவருக்கிடையில் முறுகள் - கொடூரமாக வெட்டிப் படுகொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இருவருக்கிடையில் முறுகள் - கொடூரமாக வெட்டிப் படுகொலை!

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை, மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்த, செலகம பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சாந்தபுரம், பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயது நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது கொலைக்குப் பயன்படுத்திய வாள் மற்றும் உள்நாட்டுத் துப்பாக்கி என்பவற்றை சந்தேகநபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

advertise here on top

குடும்பச் சண்டையே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலின்போது சந்தேகநபரும் காயமடைந்துள்ள நிலையில், பொலிஸ் பாதுகாப்பில் மாத்தளை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தச் சம்பவம் தொடர்பில், மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.