நாட்டில் டாலர்கள் இல்லை.. இறக்குமதி மேலும் கட்டுப்படுத்தப்படும்! நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் டாலர்கள் இல்லை.. இறக்குமதி மேலும் கட்டுப்படுத்தப்படும்! நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.


எவ்வாறாயினும் எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கான உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


டாலர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.


மேலும் இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாட்டில் நீண்டகாலமாக நிலவும் டொலர் தட்டுப்பாடு குறித்து ஆராயும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி வழங்குமாறு பல அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஏனையோர் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றால் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.


எனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாமல் நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.