BREAKING: அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு! மூன்று மாணவர்கள் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு! மூன்று மாணவர்கள் பலி!


அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உயர்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 15 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

15 வயது சிறுவன் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் ஒருவரும் மேலும் ஏழு மாணவர்களும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

மிச்சிகனின் ஒக்ஸ்போர்ட் நகரின் ஒக்ஸ்போர்ட் உயர்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவன், 14 வயது சிறுமி, 17 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்டு சில நிமிடங்களில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.