ஈஸ்டர் தாக்குதல் 63 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் 63 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


இணையவழி காணொளி மூலம் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சஹ்ரான் ஹஸீமின் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றவர்கள் என்றும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 63 பேரும் பொலன்னறுவை, அனுராதபுரம், கேகாலை, திருகோணமலை முதலான சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இணையவழி காணொளி மூலம் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.