இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய இயலுமை காணப்படுவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இதனை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (08) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
கொவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாமல் பொது இடங்களுக்குச் செல்பவர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.