ஒரே நாடு, ஒரே சட்டம் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாடு, ஒரே சட்டம் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது!


கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினர் வடக்கிற்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.


இந்த செயலணியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி புதிய விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின் படி அந்த செயலணியானது இதற்கு பின்னர், இலங்கை ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை செயற்படுத்துவது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு மற்றும் மேற்படி கோட்பாட்டை ஆய்வு செய்ததன் பின்னர் அதற்கான இலங்கைக்கு பொருத்தமான கோட்பாட்டை தயாரிப்பதற்கான முன்மொழிவை மாத்திரமே சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கிற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.


நாளை 20 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்திலும், 21 ஆம் திகதி யாழ்ப்பணத்திலும், 22 ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும், மாலை கிளிநொச்சி திறன் மேம்பாட்டு மையத்திலும் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.