சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் எதிர்வரும் ஒவ்வொரு மாத மின்சார கட்டணத்தை எனது சொந்த பணத்தில் இருந்து செலுத்த தயாராக உள்ளேன் என AO உதுமாலெப்பை தெரிவித்தார்.
இவ்வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் இனிவரும் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் மின்சார கட்டணத்தை எனது சொந்த பணத்தில் இருந்து செலுத்த தயாராக உள்ளேன். அத்துடன் நான் மரணித்த பின்பும் அதனை எனது பிள்ளைகள் செலுத்துவார்கள் என்ற உறுதிமொழியையும் வழங்குகிறேன் என சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தருமான AO உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
இன்று சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.