நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை!


கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி 10,11,12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நாளை (08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.


சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப்படுவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


இதேவேளை, ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி நாளை மறுதினம் தேசிய போராட்ட தினமாக பிரகடனப்படுத்த ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது.


ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.