விபத்தில் சிக்கிய பிக்குகள் நால்வருக்கு படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விபத்தில் சிக்கிய பிக்குகள் நால்வருக்கு படுகாயம்!


கந்தளாய் பிரதேசத்தில் வேனும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் நான்கு பிக்குகள் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில், கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்து திருகோணமலை, கந்தளாய் - கண்டி வீதியின் 87ஆம் மைல் கல்லில் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.


விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, 


ஹபரணையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், சேருவில விகாரையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.


சேருவில விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு பிக்குகள் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தின் போது 10 பிக்குகள் உட்பட 19 பேர் வானில் இருந்ததாகவும் கந்தளாய்  பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்த பிக்குகளில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


-ஒலுமுதீன் கியாஸ்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.