ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்!


ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஜாக் டோர்சி பதவி விலகியுள்ளார். இந்த தகவலை ஜாக் டோர்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


அதில், நிறுவனத்தில் இணை நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர், துணை தலைவர் வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, நான் வெளியேறுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தேன் பராக் (பராக் அகர்வால்) எங்கள் அடுத்த CEO ஆக இருப்பார் என தெரிவித்தார். 


ஏனெனில் நிறுவனம் இப்போது அதன் நிறுவனர்களிடமிருந்து முன்னேறத் தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன்.


அகர்வால் குறித்து டோர்சி கூறுகையில், 


பராக் மீது தலைமை நிர்வாக அதிகாரியாக எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவர் இங்கு பணி ஆற்றியுள்ளார். ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, பராக் அகர்வால் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான யாஹூ, மைக்ரோசாப்ட் மற்றும் AT&T ஆகியவையுடன் பணிபுரிந்துள்ளார் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.