மஹரகம நகர சபையின் தலைவர் திராஜ் பிரியந்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவிற்கு இடையில் நேற்று (23) இரவு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகர சபை தலைவரின் தந்தை வீட்டிற்கு அருகிலுள்ள பிரதான மின்மாற்றியில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுள்ளார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரும், மின்சார சபை அதிகாரிகளும் சோதனையிட்டதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணையின் போது, மஹரகம நகரசபையின் தலைவர் தனது இல்லத்திற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகளை திட்டியதை காணமுடிகிறது.
மேலும் 2018ஆம் ஆண்டளவில் மஹரகம நகர சபை தலைவர், அவரை ‘சார்’ என அழைக்கப்பட வேண்டும் என அறிவிப்பொன்றை அவர் தனது அலுவலகத்தில் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)