வீட்டுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நகர சபை தலைவரின் தந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நகர சபை தலைவரின் தந்தை!


மஹரகம நகர சபையின் தலைவர் திராஜ் பிரியந்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவிற்கு இடையில் நேற்று (23) இரவு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நகர சபை தலைவரின் தந்தை வீட்டிற்கு அருகிலுள்ள பிரதான மின்மாற்றியில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுள்ளார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரும், மின்சார சபை அதிகாரிகளும் சோதனையிட்டதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


விசாரணையின் போது, ​​மஹரகம நகரசபையின் தலைவர் தனது இல்லத்திற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகளை திட்டியதை காணமுடிகிறது. 


மேலும் 2018ஆம் ஆண்டளவில் ​​மஹரகம நகர சபை தலைவர், அவரை ‘சார்’ என அழைக்கப்பட வேண்டும் என அறிவிப்பொன்றை அவர் தனது அலுவலகத்தில் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.