சசுகஸ்கந்த - மபிம வீதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் குப்பை குவியலில் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான மொஹமட் சபீக் பாத்திமா (வயது 42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கணவர் அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதுடன் அவரது கணவர் ராகம வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளார்.