கல்முனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் பாரம்பரிய நிகழ்வு அரங்கேற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்முனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் பாரம்பரிய நிகழ்வு அரங்கேற்றம்!


கல்முனைப் பிரதேச செயலக கலாசார அதிகாரசபையின் ஏற்பாட்டில் கல்முனைக்குடி கடற்கரை மைதானத்தில் களிகம்பு பயிற்சியும் அரங்கேற்றமும் இன்று (05) சிறப்பாக நடைபெற்றது.


"தெலஸ் மகோ பகன" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், மாவட்ட செயலகமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களும்,கெளரவ அதிதிகளாக கல்முனை சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம்.றிம்சான்,கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எஸ்.எல் எம்.அஸீஸ், கலாச்சார உத்தியோகத்தர் எம்.எஸ் பெளசுல் ஹிபானா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


முஸ்லிம்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் ஒன்றான களிகப்பு (பொல்லாடி) நிகழ்வு நீண்ட நாட்களின் பிறகு திறந்த வெளியில் நடைபெற்றமையால் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதிகளவான பொதுமக்கள் கண்டுகளித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.


-சர்ஜுன் லாபீர்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.