மேல் மாகாணத்தில் விசேட அதிரடி நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்தில் விசேட அதிரடி நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர காலப்பகுதியில் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றார்களா என்பதை பரிசீலிப்பதற்காகவே இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மணிநேர சோதனை நடவடிக்கையில், 451 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

318 பேருந்து ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் 505 வர்த்தக நிலையங்கள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியமை இதன்போது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.