புதிய களனி பாலம் நல்லாட்சியின் வேலை.. இந்த அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை.. நல்லாட்சி திட்டங்களை மட்டுமே இந்த அரசாங்கம் திறக்கின்றது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய களனி பாலம் நல்லாட்சியின் வேலை.. இந்த அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை.. நல்லாட்சி திட்டங்களை மட்டுமே இந்த அரசாங்கம் திறக்கின்றது!

நேற்று திறந்து வைக்கப்பட்ட களனி பாலத்தின் தனியுரிமையை பதிவு செய்ய தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டு வீதித் திட்டத்திற்கு அமைவாக இருந்த போதிலும், 2014 ஆம் ஆண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு 2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

ஆனால், பல்வேறு இடையூறுகளால் திறக்க முடியவில்லை என்றார்.

திறப்பு விழா குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஆனால் தற்போதைய அரசாங்கம் அதன் பிரத்தியேக உரிமைகளை பறிப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் திறந்து வைப்பதாகவும், இந்த அரசாங்கம் எந்தப் பணிகளையும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.