அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் மற்றும் உணவு மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
செரண்டிப் மற்றும் ப்ரீமா நிறுவனங்களில் இருந்து தேவையான விநியோகம் கிடைக்கவில்லை என புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, செரண்டிப் கோதுமை மாவின் விலை நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)