கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்!
Posted by Yazh NewsAdmin-
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொட பரிமாற்றத்தின் ஒரு பகுதி தொடங்கி களனி பாலத்திற்கு இடையிலான பகுதி நாளை காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு – கண்டி வீதி மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு வீதியை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக குறித்த வீதிப் பகுதி மூடப்படவுள்ளது
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.