நாட்டில் 900 கொள்கலன்களில் அத்தியாவசிய பொருட்கள் -டொலர்கள் இன்றி தவிக்கும் உரிமையாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் 900 கொள்கலன்களில் அத்தியாவசிய பொருட்கள் -டொலர்கள் இன்றி தவிக்கும் உரிமையாளர்கள்!

அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள் உரிமையாளர்களால் பொருட்களை வெளியே எடுக்க முடியாததன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் (SLPA) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக உரிமையாளர்கள் தங்களுடைய கொள்கலன்களை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லங்காதீப செய்திப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

10,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான இறக்குமதி செய்யப்பட்ட சீனி கிட்டத்தட்ட 350 கொள்கலன்கள் துறைமுகத்தில் காணப்படுகின்றது. 

இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான தட்டுப்பாடுகளுக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் விளைவாக கொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெளியே எடுக்கப்படாமல் இருப்பதால், இலங்கையில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.