கொத்து ரொட்டியால் ஏற்பட்ட மோதல்! 26 வயது இளைஞர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொத்து ரொட்டியால் ஏற்பட்ட மோதல்! 26 வயது இளைஞர் பலி!


பத்தேகம பிரதேசத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் கொத்து ரொட்டியினால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.


குறித்த இளைஞர் கொத்து ரொட்டியை கொள்வனவு செய்வதற்காக நேற்று (02) இரவு சிற்றுண்டிச்சாலை ஒன்றுக்கு சென்றுள்ளார்.


இதன்போது அதன் உரிமையாளருக்கும், குறித்த இளைஞருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து, தமது வீட்டுக்குச் சென்ற  இளைஞர், கூரிய ஆயுதமொன்றுடன் மீண்டும் சிற்றுண்டிச்சாலைக்கு திரும்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


மேற்படி இளைஞர், சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரைத் தாக்க முயற்சித்தபோது, அருகிலிருந்த உரிமையாளரின் மகன், உலக்கையால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பத்தேகம – கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.


சம்பவத்தில் காயமடைந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.