மது பிரியர்களுக்கு இனி 180 மில்லி போத்தல் இல்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மது பிரியர்களுக்கு இனி 180 மில்லி போத்தல் இல்லை!


எதிர்காலத்தில் 180 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட சிறிய மதுபான போத்தல்களுக்கு தடை விதிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.


பயன்பாட்டிற்குப் பிறகு சுற்றுச்சூழலில் இவை வீசப்படுவதை தடுக்கும் முகமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


2018 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 100 மில்லியனுக்கும் அதிகமான சிறிய போத்தல்கள் தனிநபர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.


அதேவேளை பாவனையின் பின்னர்  100 சதவீத போத்தல்கள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்குக் காரணம், இந்தப் போத்தல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மீள்சுழற்சி செய்யப்படுவதோ அல்லது மீண்டும் அவற்றை சேகரிக்கும் செயற்பாடுகளோ முன்னெடுக்கப்படுவதில்லையெனவும் சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.