நவம்பர் 08 பாடசாலைகள் ஆரம்பம் - அறிவுருத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நவம்பர் 08 பாடசாலைகள் ஆரம்பம் - அறிவுருத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது!

அனைத்துப் பாடசாலைகளிலும் 10,11,12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் 2021 நவம்பர் 08 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த தரங்களுக்குப் பொறுப்பான அனைத்து கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களையும் திங்கட்கிழமை (08) முதல் கடமைக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், கர்ப்பிணிப் பணியாளர்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் வேலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள், அதே நேரத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தியாவசிய சூழ்நிலைகளில் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.

பாடசாலைக்கு திரும்பும் முதல் சில நாட்களில் மாணவர்கள் பாடசாலை சீருடைகளை அணிய வேண்டிய அவசியமில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களை தகுந்த சாதாரண உடையில் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு பாடசாலை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மேலும் அறிவுறுத்துகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.