இலங்கையில் நீண்ட நாள் கனவாக இருந்த PayPal சேவைக்கு மத்திய வங்கி அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் நீண்ட நாள் கனவாக இருந்த PayPal சேவைக்கு மத்திய வங்கி அனுமதி!


நாட்டில் PayPal சேவையினை பெறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இந்தியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உள்ள PayPal பிராந்திய அலுவலகங்களை அரசாங்கம் அணுகியுள்ளதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ரி.எம்.ஜே.வை.பி. பெர்னாண்டோ தெரிவித்தார்.


தற்போது வெளிநாட்டு கட்டணங்களை மட்டுமே PayPal வழியாக செலுத்த முடியும். PayPal மூலம் இலங்கையிலிருந்து பணம் செலுத்த முடியாது.


இந்த சேவைகளை விரைவில் பெற முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


பணம் செலுத்தும் சேவையைப் பெறுவதற்கும் வழங்குவதற்கும் இலங்கை தரப்பில் எந்த தடையும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.