BREAKING: நாளை முதல் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி - வழிகாட்டல்கள் இணைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: நாளை முதல் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி - வழிகாட்டல்கள் இணைப்பு



நாளை முதல் (22) ஜும்ஆ தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அதிகபட்சமாக 50 நபர்களுக்கு மாத்திரம் ஒன்று கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாயல்களில் ஒரேயொரு குத்பா பிரசங்கமே நடாத்தப்படல் வேண்டும், மாறாக இரு ஜும்ஆ தொழுகைகளுக்கு அனுமதியில்லை.

வருகை தருபவர்கள் சுகாதார வழிமுறைகளை சரிவர பேணுவதோடு, முசல்லாஹ் (விரிப்பு) எடுத்து வருதல் அவசியம்.

தொழுகைகள் நடாத்தப்படும் போது ஒரு வரிசையை (சஃப்) விட்டு  இடவெளி பேணி அடுத்த வரிசையில் நிற்பது அவசியம்.

முகக்கவசம் கட்டாயம் அணியப்படல் வேண்டும்.

பள்ளிவாயல்களில் சவர்க்காரமிட்டு கைகளை கழுவிக்கொள்ளும் வசதிகள் காணப்படல் வேண்டும்.

முடிந்தளவு வீடுகளில் விழுச்செய்தல் வேண்டும், ஹவுல்களில் வுழுச்செய்தல் கூடாது. குழாய்களில் வுழுச் செய்தல் முடியும்

கொரோனா அறிகுறிகளுடன் (இருமல்,சலி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை) எவரும் பள்ளிவாயனுள் நுழையக்கூடாது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.