நோர்வேயில் வில் - அம்புத் தாக்குதல்! ஐவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நோர்வேயில் வில் - அம்புத் தாக்குதல்! ஐவர் பலி!


நோர்வேயில் வில் - அம்பு கொண்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயில் நேற்றிரவு (13) மேற்கொள்ளப்பட்ட அம்புத் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நோர்வேயின் கொங்ஸ்பெர்க் நகரின் பல்வேறு இடங்களில் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தாக்குதலில் காயமடைந்து இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த அம்புத்தாக்குதலுக்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.