சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கத்தார் மற்றும் சவூதி செல்லலாமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கத்தார் மற்றும் சவூதி செல்லலாமா?


சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.


மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையிலேயே இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.


தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்பு பணியகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக சுமார் 8 ஆயிரம் பேருக்கே பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், சுகாதார துறைக்காக 153.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 பில்லியன் ரூபாவினால் அது குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.