காணி தகராறு; மாமனாரின் கையை வெட்டி வீசிய மருமகன்! கிளிநொச்சியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணி தகராறு; மாமனாரின் கையை வெட்டி வீசிய மருமகன்! கிளிநொச்சியில் சம்பவம்!


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் இன்றைய தினம் (11) காணிப் பிரச்சனை ஒன்று காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் விளைவாக மாமனாரின் கையை மருமகன் கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உறவினர்களால் காயமடைந்தவர் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.


இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அச்சம்பவத்தில் கையை இழந்தவர் 64 வயதுடையவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.