இலங்கை உட்பட சில நாடுகளுக்கு எதிராக சிங்கப்பூர் விதித்த பயணத்தடையை அந்நாட்டு அரசாங்கம் நீக்கவுள்ளது.
அதன்படி வருகின்ற அக்டோபர் 27ஆம் திகதியிலிருந்து இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி உண்டு.
இதற்கு முன்னர் இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.