கொடூர தாக்குதல் - இளைஞர் ஒருவரின் இரு கைகளும் துண்டிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொடூர தாக்குதல் - இளைஞர் ஒருவரின் இரு கைகளும் துண்டிப்பு!

பண்டாரகம - வல்கம வீட்டுத் தொகுதியை அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்த இரண்டு நபர்கள் மீது கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது.

நேற்று பிற்பகல் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் ஒருவரின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மற்றையவரின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நபரே சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் வல்கம மயானத்தின் முன்பாக வீழ்ந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.