நேற்று பிற்பகல் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் ஒருவரின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மற்றையவரின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த நபரே சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் வல்கம மயானத்தின் முன்பாக வீழ்ந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.