பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு நிதி அமைச்சிடம் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு நிதி அமைச்சிடம் வேண்டுகோள்!

நாட்டில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு எரிசக்தி அமைச்சு மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியன நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும் விலை அதிகரிப்புக்கான வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

விலைகளை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள் வேறு வகையான தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஸ்டத்தினை ஈடுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.