நுகேகொடவில் காவல்துறை கணினி குற்றப் பிரிவினரால் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து ஒரு பொருள் வந்திருப்பதாக கூறி குறித்த வெளிநாட்டவர்கள் இலங்கை யுவதியிடம் சுமார் ஒரு லட்சம் வரை பணம் மோசடி செய்துள்ளார்.
தென்கொரியா - லெசதோ என்ற இடத்தைச் சேர்ந்த 23 வயதான நபர், தம்மை தொழிலதிபர் என கூறியுள்ளார்.
இது போன்ற போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை மக்களிடம் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.