வெளிநாட்டில் இருந்து பொருள் வந்துள்ளதாக கூறி இலங்கைப்பெண்ணை ஏமாற்றிய நபர் சிக்கினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் இருந்து பொருள் வந்துள்ளதாக கூறி இலங்கைப்பெண்ணை ஏமாற்றிய நபர் சிக்கினார்!

பேஸ்புக் மூலம் தம்மை வெளிநாட்டவர் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் மாத்தறை பகுதியில் உள்ள பெண்ணை நம்பவைத்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடவில் காவல்துறை கணினி குற்றப் பிரிவினரால் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து ஒரு பொருள் வந்திருப்பதாக கூறி குறித்த வெளிநாட்டவர்கள் இலங்கை யுவதியிடம் சுமார் ஒரு லட்சம் வரை பணம் மோசடி செய்துள்ளார்.

தென்கொரியா - லெசதோ என்ற இடத்தைச் சேர்ந்த 23 வயதான நபர், தம்மை தொழிலதிபர் என கூறியுள்ளார்.

இது போன்ற போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை மக்களிடம் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.