வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம்; நடந்தது என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம்; நடந்தது என்ன?


உலகம் முழுவதும் நேற்று (04) இரவு முதல் சுமார் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக செயலிழப்பில் இருந்த பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன.


மில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு பிரவேசம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் பரிதவித்து வந்தனர்.


இது தொடர்பில் உலகளாவிய ரீதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பயனர்கள் மூலம் பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.


இலங்கை இந்தியா மற்றும் ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.


உலகளாவிய ரூட்டிங் அட்டவணையில் (routing table) இருந்து டிஎன்எஸ் (DNS) பதிவுகள் தவறுதலாக திரும்பி பெறப்பட்ட நிலையிலேயே இந்த செயலிழப்பு நேர்ந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் அது தற்போது சரி செய்யப்பட்டு அனைத்து சேவைகளும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.