இரசாயன உரங்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான ஜனாதிபதியின் சிறந்த முடிவை மாற்றியமைக்க உரம் நிறுவனங்கள் விவசாயியைத் தூண்டுகின்றன என்று பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் முன்னணி இரசாயன உர நிறுவனங்கள் போராட்டங்களின் பின்னணியில் இருப்பதாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசியல் அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகளைப் பயன்படுத்தி இரசாயன உரங்களின் பயன்பாட்டை மீண்டும் நிறுத்துவதற்கான ஜனாதிபதியின் நேரடி முடிவை சவால் செய்வதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் விவசாயம் கடந்த காலத்திலிருந்து கரிம உரங்களின் பாவனையில் தங்கியிருந்ததாகவும்,சிறுநீரக நோய் காரணமாக ஆபத்தான சூழ்நிலையில் உள்ள நாட்டின் வளத்தையும் மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் இரசாயன உரங்களின் பின்னால் விவசாயிகள் ஓடுவது துரதிஷ்டவசமானது எனவும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
உர நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய போதிலும், அரசாங்கம் உறுதியளித்தபடி இயற்கை உரங்களை வழங்காததால் விவசாயிகளின் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது என்றார்.
தற்போதைய சூழ்நிலையை சரியாக நிர்வகிக்க தவறியதால் விவசாய அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.