எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்திய ஐ.ஓ.சி! வெகுவிரைவில் விலை அதிகரிக்கும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்திய ஐ.ஓ.சி! வெகுவிரைவில் விலை அதிகரிக்கும்?


லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இந்திய ஓயில் நிறுவனத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதேவேளை 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் உலக சந்தையில் அதிகளவான எரிபொருள் விலை இன்று பதிவானது


ப்ரென்ட் (Brent) ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினத்தைவிட மூன்று சதவீதத்தினால் அதிகரித்து 85.10 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.


திடீரென எரிபொருள் விநியோகம் செயற்பாட்டை ஐ.ஓ.சி நிறுவனம் நிறுத்தியமையினால் தமது சங்கத்தினரும், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கோசல விதான பத்திரண தெரிவித்துள்ளார்.


லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.


இதற்கமைய ஒரு லீற்றர் டீசல் 25 ரூபாவினாலும், ஒரு லீற்றர் பெற்றோல் 15 ரூபாவினாலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


இவ்வாறான பின்னணியில் ஐ.ஓ.சி நிறுவனம், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.