பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட அஹ்னப் ஜெஸீம் விவகாரம்; ஒரு வருடத்தின் பின் மகனை சந்தித்த தாய்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட அஹ்னப் ஜெஸீம் விவகாரம்; ஒரு வருடத்தின் பின் மகனை சந்தித்த தாய்!

Ahnaf Jazeem

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு கடந்த 2020 மே மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான மன்னாரைச் சேர்ந்த அஹ்னப் ஜெஸீமை, சுமார் ஒரு வருடத்தின் பின்னர் அவரது தாயார் சிறையில் சந்­தித்­துள்­ள­தாக அவ­ரது சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜயசேகர தெரி­வித்தார்.


“ஒரு வருடம் கழித்து, மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஒரு தாய் தன் மகனை சிறையில் பார்த்து அவருடன் சில வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது என்பது எவ்வளவு கவலைக்குரியது? இது பற்றி முழு மனித குலமும் அவமானப்பட வேண்டும்” என சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர இச் சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.


கொவிட் நிலை­மை­களை கார­ண­மாகக் கொண்டு அவரை நேரில் சந்திப்பதற்கு இது­வரை சிறை அதி­கா­ரிகள் அனு­மதி மறுத்து வந்­தனர். இந் நிலை­யி­லேயே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு மகசின் சிறைச்சாலைக்குச் சென்று தனது மகனை சந்­திப்­ப­தற்கு அவ­ரது தாயா­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. 


சுமார் 15 நிமி­டங்கள் வரை இச் சந்­திப்பு நீடித்­த­தாக அறிய முடி­கி­றது.


அஹ்னப் ஜெஸீம் எது­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளு­மின்றி அநி­யா­ய­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை உட­ன­டி­யாக விடு­தலை செய்­யு­மாறும் சர்வ­தேச மன்­னிப்புச் சபை, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


-விடிவெள்ளி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.