நபரொருவர் மீது தாக்குதல்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நபரொருவர் மீது தாக்குதல்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


முகக்கவசம் அணியக் கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை இருவர் தரையில் தள்ளித் தாக்கியதால் படுகாயமடைந்த ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முகக்கவசம் இல்லாமல் மீகொடை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை எரிபொருள் நிலைய ஊழியர், தூர விலகுமாறு கூறியதையடுத்து ஓட்டுநர் அவரை மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சில நிமிடங்களுக்குப் பின்னர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த மற்றொரு நபருடன் திரும்பி வந்து ஊழியரைத் தாக்கியுள்ளார்.


தாக்குதலை தடுக்க முயன்ற எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மற்றொரு ஊழியரும் தாக்கப்பட்டுள்ளார்.


பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மீகொட பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


மேலும் தாக்கியோர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.