பிரதமர் மகிந்த ராஜபக்சவால் மட்டுமே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்கிறார் தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளரும், அபயராமய விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.
நாரஹேன்பிட்டிய அபயராமயவில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நான் கட்டிய வீட்டில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிராக நாலா பக்கங்களிலும் இருந்தும் எதிர்ப்புகள் வலுப்பெறுவதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நம்பியே 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.
அதனால் நாட்டை பாதுகாக்க நினைத்தால் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்குடன் நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று நினைத்தாலும், 200% மக்கள் இப்போது அரசாங்கத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அரச தலைவராக பதவி வகித்தாலும், நாட்டை கட்டியெழுப்ப அனுபவமிக்க மகிந்த ராஜபக்ச அவசியம் என அவரே சுட்டிக்காட்டியுள்ளார்” என்றார்.
நாரஹேன்பிட்டிய அபயராமயவில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நான் கட்டிய வீட்டில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிராக நாலா பக்கங்களிலும் இருந்தும் எதிர்ப்புகள் வலுப்பெறுவதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நம்பியே 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.
அதனால் நாட்டை பாதுகாக்க நினைத்தால் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்குடன் நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று நினைத்தாலும், 200% மக்கள் இப்போது அரசாங்கத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அரச தலைவராக பதவி வகித்தாலும், நாட்டை கட்டியெழுப்ப அனுபவமிக்க மகிந்த ராஜபக்ச அவசியம் என அவரே சுட்டிக்காட்டியுள்ளார்” என்றார்.