இந்திய வெளியுறவுச் செயலாளர் சற்றுமுன் இலங்கை வருகை! காரணம் இதுதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய வெளியுறவுச் செயலாளர் சற்றுமுன் இலங்கை வருகை! காரணம் இதுதான்!

ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சற்றுமுன்னர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.


வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பிற்கமைய அவரின் விஜயம் அமைந்துள்ளது.


இன்றிலிருந்து (02) எதிர்வரும் 05ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரச தலைவர்களுடனான முக்கிய சந்திப்பிலும் ஈடுபடவுள்ளார்.


இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.


விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.