மூன்று மாத கால அவகாசம் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று மாத கால அவகாசம் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ மேலும் மூன்று மாத காலத்தை வழங்கியுள்ளார்.

செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் இதை நிறைவு செய்யுமாறு குறித்த பணிக்காக நியமிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு முன்னர் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

எனினும் அந்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், மேலும் மூன்று மாத காலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டவாக்க சபை, கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வாரத்தில் சில முறை கூடி இந்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகளை ஆராய்ந்து வருகிறது.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.