சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் கைது!


சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைமுக வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்த 63 பேர் கைது செய்துயப்பட்டுள்ளனர். 

இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களில் பெண்ணொருவர் உட்பட இரண்டு சிறார்கள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

கடந்த 15 நாட்களாக இவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து குறித்த தனியார் விடுதியில் தங்கி இருந்ததாக அரச புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் செய்து வருவதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

-அப்துல்சலாம் யாசீம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.