14 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

14 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் இது தான்!

தம்புள்ளையில் பாழடைந்த வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுமியின் சடலத்திற்கு நேற்று தம்புள்ளை பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

சிறுமியின் இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

குறித்த சிறுமியின் உடலுக்கு தம்புள்ளை மாவட்ட பொது மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இதன்போது வன்முறைச் செயல் காரணமாக மரணம் நிகழ்ந்தது என்று பிரேதபரிசோதனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பரிசோதனைக்காக சிறுமியின் உடல் பாகங்களை ஆய்வாளர் துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த சிறுமி எப்படி கொல்லப்பட்டார் என்பது இன்னும் தெரியவரவில்லை.

சிறுமியைக் கொன்ற சந்தேகத்தின் பேரில் தப்பியோடிய தம்பதியை கைது செய்ய மாத்தளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இரண்டு குழுக்கள் மற்றும் தம்புள்ளை காவல்துறையின் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான்காவது பெண் பிள்ளையான இவர், தம்புள்ளை அதுபாரயாய என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது பெற்றோருடன் வசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.