வெலிக்கடை மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டே இல்லையாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெலிக்கடை மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டே இல்லையாம்!

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் சிசிடிவி கமெராக்கள் இல்லை என சிங்கள பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலைகளில் மட்டுமே இந்த வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே லொஹான் ரத்வத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு சிசிடிவி காட்சிகள் கிடைக்காது என்றும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சிறைச்சாலைகளுக்கு வருபவர்கள் கையொப்பமிடும் பதிவுப் புத்தகத்தை கொண்டு, தேவையெனில் விசாரணையை மேற்கொள்ள முடியும் என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளதாக குறித்த செய்தி அமைந்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.