மன்னார் நகர பகுதி மக்களால் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாடின் அடிப்படையில் மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம் அர்மிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சீமேந்து பதுக்கள் உட்பட பொருட்களை அதிக விலைக்கு விற்றமை ,காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை, உட்பட பல செயற்பாட்டில் ஈடுபட்ட வர்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நிலையை பயன்படுத்தி மன்னார் நகர பகுதிகளில் குறிப்பாக சாந்திபுரம், தாராபுரம், தலைமன்னார் பிரதான வீதி பகுதிகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் காலவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் பொருட்களை பதுக்கிமை உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது இன்றைய தினம் (21) மன்னார் மாவட்ட பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேநேரம் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி பெரியகமம் அருகில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகாமையில் உரிய அனுமதி பத்திரம் இன்றி சீமேந்து பதுக்கி வைக்கப்பட்ட களஞ்சிய சாலைக்கும் பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினர் சீல் வைத்துள்ளனர்.